செல்லையா கதிர்காமு

செல்லையா கதிர்காமு (முறிகண்டி மணியம்)
மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையாதெய்வானை தம்பதியரின் மருமகனுமாகிய செல்லையா கதிர்காமு (முறிகண்டி மணியம்) நேற்று (29.07.2010) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் பூரணத்தின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சின்னத்தங்கம் ஆகியோரின் சகோதரனும் உதயகுமாரன், ஜெயக்குமாரன் (பிரான்ஸ்), விமலகுமாரன் (நோர்வே), அற்புதமலர், அற்புதராணி (கனடா), அற்புதலீலா, அற்புதலதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் இரஞ்சித மலர், ஜெயராணி (பிரான்ஸ்), வனிதா (நோர்வே), அருணாசலம் (இ.போ.ச. சாலைப் பரிசோதகர்), சிறிகாந்தன் (கனடா), நவரத்தினம், கலைச்செல்வன் (சுவிஸ்) ஆகியோரின் மாமனும் அபிரா, அதிதரன் (பிரான்ஸ்), அபர்ணா (பிரான்ஸ்), ஆருதன் (நோர்வே), அம்புஜன் (நோர்வே), ஆரவி (நோர்வே) ஆகியோரின் அப்பப்பாவும் வனிதா, முஜிந்தா, சாரங்கன் (கனடா), சாந்தனா (கனடா), சாலவன் (கனடா), கோபிநாத் (கனடா), மாதங்கி, விசாகன், அங்கவின் (சுவிஸ்), வித்தகன் (சுவிஸ்) ஆகியோரின் அம்மப்பாவும் சிவகுமாரின் பேரனும் அறிவகன், அம்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.07.2010) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மீசாலை வடக்கு,
கொடிகாமம்.



